தமிழ்நாடு

“அதிமுகவில் வென்றவர்களை திமுகவில் சேருமாறு காவல் துறையினர் மிரட்டுகிறார்கள்” - ஓபிஎஸ்

கலிலுல்லா

எதிர்கட்சியை அழித்துவிட திமுக கங்கணம் கட்டிக் கொண்டுள்ளதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். கட்சி நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோரும் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், கள்ள ஓட்டு போட வந்தவர் மீது வழக்கு பதியாமல், அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு அரசு அச்சுறுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.

தேனி மாவட்டத்தில் 11 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், அவர்களை காவல் துறையினர் திமுகவில் சேர மிரட்டுவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டினார்.