தமிழ்நாடு

மதுரையில் விசாரணை கைதி உயிரிழப்பு - என்ன காரணம்?

webteam

மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அலிசேட் என்ற 62 வயது முதியவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். அதனைத் தொடர்ந்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட  நிலையில் , அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அலிசேட் ஏற்கெனவே சர்க்கரை மற்றும் மூச்சுத் திணறல் நோயால் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.

விசாரணை கைதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

இதையும் படிக்க: கிணத்தை காணோம் பாணியில் செல்போன் டவரையே தூக்கிய கும்பல்: விசாரணையில் வெளியான பகீர் தகவல்