சார்நிலைப் பணியாளர் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார் குறித்து, சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசின் பணியாளர் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
சார்நிலைப் பணியாளர் தேர்வு கடந்த மாதம் 21ஆம் தேதி நடைபெற்றது. தேர்வின் வினாத்தாள் வெளியானதாகக் கூறப்படும் நிலையில், அது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தேர்வு எழுதியவர்களில் சிலர், பணியாளர் தேர்வுக்குழு ஆணையத்திடம் மனு அளித்தனர். மனுவை ஏற்றுக்கொண்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசிடம் பரிந்துரைக்குமாறு, பணியாளர் பயிற்சி துறையிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக பணியாளர் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.