தமிழ்நாடு

மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்

webteam

மதுரையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன. 

திண்டுக்கல் கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் அறிவழகன். இவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்தில் சிக்கினார். இதையடுத்து மதுரை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் மூளைச்சாவு அடைந்தார். இதனை உறுதி செய்த மருத்துவர்கள் அறிவழகனின் குடும்பத்தினரிடம் இது பற்றி தகவல் தெரிவித்தனர். பின்பு இவரின் உடல் உறுப்புக்களை தானமாக வழங்க அவரின் குடும்பத்தினர் முன்வந்ததையடுத்து சிறுநீரகங்கள் மதுரை மற்றும் நெல்லை அரசு மருத்துவம‌னைகளுக்கும், கல்லீரல் மதுரை அப்போலோ மருத்துவமனைக்கும், இரண்டு கண்களும் மதுரை அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.