தமிழ்நாடு

ரோஜாக்களில் பரவும் கரும்புள்ளி: விவசாயிகள் வேதனை

ரோஜாக்களில் பரவும் கரும்புள்ளி: விவசாயிகள் வேதனை

webteam

பட்டன் ரோஜாக்களில் கரும்புள்ளி நோய் தாக்கியுள்ளதால் குறைந்த விலைக்கு விற்பனையாவதாக விவசாயிகள் கவலை  தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பட்டன் ரோஜாக்களில் கரும்புள்ளி நோய் தாக்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர் மழை காரணமாக ரோஜா செடிகளை நோய் தாக்கியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இலைகள் கருகி, ரோஜா இதழ்கள் உதிர்வதால் மலர்களின் தரம் குறைவதாகவும் இதனால்  விலை பெருமளவில்  குறைந்துவிட்டதாகவும் அவர்கள்  வருத்தம் தெரிவித்துள்ளனர்.