கைது செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன்
கைது செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன் PT WEB
தமிழ்நாடு

தஞ்சை : மனைவியை மிரட்டுவதற்காக மகளின் கையை பிளேடால் அறுத்த கொடூர தந்தை; வெளியான அதிர்ச்சி வீடியோ!

விமல் ராஜ்

பட்டுக்கோட்டை செய்தியாளர் - ராஜா

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள கீழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சிவரஞ்சனி (30). இவர்களுக்குத் திருமணமாகி 4 வயதில் தன்ஷிகாஸ்ரீ என்ற மகள் உள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக சிவரஞ்சனி சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் வெளிநாட்டில் இருக்கும் தனது மனைவியை மிரட்டி சொந்த ஊருக்கு வரவழைப்பதற்காக பாலசுப்பிரமணியன் தான் பெற்ற மகள் தன்ஷிகாஸ்ரீயின், கையை பிளேடால் அறுத்துள்ளார். இதில் ரத்தம் வெளியே வந்ததை வீடியோவில் காட்டச் சொல்லி குழந்தையைக் கொடுமைப்படுத்தியுள்ளார். இதனை வீடியோவாக எடுத்து மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணியன் தாய், தடுக்க வந்துள்ளார். அவரை தகாத வார்த்தைகளால் பேசி, கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பாலசுப்பிரமணியனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். காயமடைந்த சிறுமியை மீட்ட போலீசார் முதலுதவி அளித்த, பின்னர் காப்பகத்தில் விட்டுச் சென்றனர்.