Road Accident
Road Accident pt desk
தமிழ்நாடு

தஞ்சாவூர்: அதிகாலையில் நிகழ்ந்த சாலை விபத்து.. வேளாங்கண்ணிக்குச் சென்ற 4 பேர் உயிரிழப்பு

webteam

செய்தியாளர்: I.M.ராஜா

தூத்துக்குடி மூணாவயல் பகுதியைச் சேர்ந்த 11 பேர் டவேரா வாகனத்தில் வேளாங்கண்ணிக்கு பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினம் பகுதியில் வந்தபோது ஓட்டுநர் எதிர்பாராதவிதமாக தூங்கியதை அடுத்து சாலையோரமாக இருந்த பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

Ambulance

இந்த விபத்தில் சிக்கிய சின்ன பாண்டி, பாக்யராஜ், ஞானம்மாள், ராணி ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த ஏழு பேர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள சேதுபாவாசத்திரம் போலீசார், விசாரணை செய்து வருகின்றனர்.