தமிழ்நாடு

தாமிரபரணி இணைப்புத் திட்டம் 2022 மார்ச் 31-க்குள் முடிக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு

Rasus

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் 2022 மார்ச் 31-க்குள் முடிக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், நகர்ப்புற வடிகால் திட்டத்திற்கு ரூ.1450 கோடியும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.2,350 கோடியும், பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்திற்கு ரூ.3,700 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறினார்.

மேலும் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் 2022 மார்ச் 31-க்குள் முடிக்கப்படும் எனவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.