தமிழ்நாடு

பாம்பு கடிக்கு ஆளான தீவிரவாதி பிலால் மாலிக் - ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி

Sinekadhara

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதி பிலால் மாலிக்கை பாம்பு கடித்ததை அடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிலால் மாலிக் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இன்று காலையில் சிறை வளாகத்தில் இருந்த அவரை சாரைப் பாம்பு கடித்தது. சக கைதிகள் அந்தச் சாரைப் பாம்பை அடித்துக் கொன்றனர். பிலால் மாலிக்கிற்கு சிறையில் முதல் உதவி வழங்கப்பட்ட பின்னர், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டதோடு, தொடர்ந்து சிகிச்சை வழங்கப்படுகிறது.