தமிழ்நாடு

தென்காசி: இளம் ஊராட்சி மன்றத் தலைவியாக பதவியேற்ற இரு பெண்கள்

kaleelrahman

இளம் ஊராட்சி மன்றத் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் வயது பெண்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

தென்காசி மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி ஊராசி மன்றத் தலைவியாக சாருகலா (22) என்பவர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதே போல் அனு (21) என்பவர் தெற்குமேடு ஊராட்சி மன்றத் தலைவியாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில் இவர்கள் இருவரும் அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.