தமிழ்நாடு

பள்ளி வளாகத்திலேயே தகாத உறவு.. ஆசிரியருக்கு தர்ம அடி..!

பள்ளி வளாகத்திலேயே தகாத உறவு.. ஆசிரியருக்கு தர்ம அடி..!

Rasus

நாமக்கல் அருகே பள்ளி வளாகத்தில் சத்துணவு அமைப்பாளரிடம் தகாத உறவில் பள்ளி ஆசிரியரே ஈடுபட்டதாக கூறி ஆசிரியருக்கு ஊர் மக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்த எஸ்.உடுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 4 வருடங்களாக பள்ளி ஆசிரியராக புதன்சந்தையை சேர்ந்த சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பள்ளியில் அங்கன்வாடி மைய பொறுப்பாளராக பணியாற்றி வரும் ஜெயந்திக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பள்ளி வளாகத்திலேயே ஆசிரியர் சரவணனும் அங்கன்வாடி மைய பொறுப்பாளர் ஜெயந்தியும் பள்ளி கழிவறையில் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட  பள்ளி மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயராஜ் சம்பந்தப்பட்ட இருவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் பள்ளியின் ஆசிரியர் சரவணனும், சத்துணவு அமைப்பாளர் ஜெயந்தியும் பள்ளி வளாகத்திலே தகாத உறவில் ஈடுபட முயன்றதாக தெரிகிறது. இதனையறிந்த ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியில் இருந்த ஆசிரியர் சரவணன் வகுப்பறைக்கு சென்று அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். அத்துடன் கல்வி அதிகாரிகள் மற்றும் புதுச்சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்து பள்ளி ஆசிரியர் சரவணன் மீது மேல்நடவடிக்கை எடுக்கக் கோரினர். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்று கொடுக்க வேண்டிய ஆசிரியரே ஒழுங்கீனமாக நடந்து கொண்டது அனைவருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.