தமிழ்நாடு

காலை 6 மணி முதலே மது விற்பனை

webteam

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியில் காலை 6 மணி முதலே பார்களில் மதுபானங்கள் விற்கப்படுகின்றன.
மதுக்கடைகள் நண்பகல் 12 மணிக்கு மேல் தான் திறக்க வேண்டும் என்றாலும், இதுபோன்ற சட்டவிரோத விற்பனை நாள்தோறும் நடைபெற்று வருவதாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாமல்லபுரம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் எட்வர்ட்டிடம் கேட்டபோது, இதுபோன்ற சட்டவிரோத மது விற்பனைகளை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.