தமிழ்நாடு

அரசு கல்லூரி விடுதி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் - 9 பேர் சிகிச்சைக்கு அனுமதி

kaleelrahman

ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 9 பேர் வாந்தியெடுத்து மயக்கமடைந்ததை அடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் 70-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மாணவி விடுதியில் உணவு உட்கொண்ட மாணவிகள் 9 பேருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தியெடுத்ததோடு மயக்கமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக அங்கிருந்த மாணவிகள் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.