தமிழ்நாடு

அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு அதிகரிப்பு - தமிழக அரசு

அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு அதிகரிப்பு - தமிழக அரசு

webteam

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி தமிழக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.