தமிழ்நாடு

கட்டாயப்படுத்தியதால் தான் ராஜினாமா செய்தேன் : முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

webteam

என்னை கட்டாயப்படுத்தியதால் தான் ராஜினாமா செய்தேன் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 40 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், சில உண்மை விவரங்களை தெரிவிக்க உள்ளேன். ஜெயலலிதாவின் நிலையை கண்டு மருத்துவமனையில் அழுது புலம்பினேன். ஜெயலலிதா வாக்குறுதியை நிறைவேற்றவே தொடர்ந்து பதவியில் இருந்தேன். சசிகலா முதலமைச்சராக வேண்டும் என என்னிடம் வலியுறுத்தினர். என்னை முதல்வராக வைத்துக்கொண்டு ஏன் அவமானப்படுத்த வேண்டும் எனக் கூறினார். மேலும், என்னைக் கட்டாயப்படுத்தியதால் பதவியை ராஜினா செய்தேன் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது என கூறினார்.