கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 அன்று பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கக்கோரி, தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தனது கடிதத்தில் அவர், “தமிழ் பேசும் மக்கள் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு பொங்கலை ஒட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான, உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக, கேரள அரசு ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது என அறிகிறேன். ஆனால் இந்த வருடம், ஜன.15ம் தேதி இந்த 6 மாவட்டங்களிலும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே உலகம் முழுவதும் தமிழ்ச் சமூகங்களிடையே கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜன.14 ம் நாளை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காளைகளுக்காக குவியும் பரிசுப்பொருள்கள், நன்கொடைகள்!