தமிழ்நாடு

பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

Rasus

இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 50 பேரை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரமதர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 5-ஆம் தேதி 8 தமிழக மீனவர்களையும், 2 படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர்களையும், 143 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் தமது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.