தமிழ்நாடு

"தெலங்கானாவில் இருந்தாலும் தமிழகத்தில் நடப்பதை கவனிக்கிறேன்" - ‌ஆளுநர் தமிழிசை

webteam

தாய் வீட்டிற்கு வரும் குழந்தையைப் போல் தமிழகத்திற்கு ஓடி வருவதாக தெலங்கானா ‌ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு, புற்றுநோயில் இருந்து விடுதலை ஆராய்ச்சி மையம் சார்பில் தமிழிசை சவுந்திரராஜனுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய அவர், தெலங்கானாவில் இருந்தாலும் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை கவனித்துக் கொண்டே இருப்பதாகத் தெரிவித்தார். குழந்தை சுஜித் உயிரிழப்பு, ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை போன்றவை மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியதாகக் கூறினார்.