தமிழ்நாடு

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் தேர்வு

EllusamyKarthik

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டிஜிபி ஜே.கே. திரிபாதி நாளையுடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • 1987ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சைலேந்திர பாபு 25 வயதில் தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
  • கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் எஸ்.பியாகவும், சென்னை அடையாறில் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். 
  • சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐஜியாகவும் முத்திரை பதித்தவர் சைலேந்திரபாபு.
  • 2010-இல் கோவையில் ஆணையராக இருந்தபோது, பள்ளிக்குழந்தைகளைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய குற்றவாளி என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
  • வடக்கு மண்டல ஐஜியாக பதவியேற்றுக் கொண்ட சைலேந்திர பாபு கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபியாகவும் பதவி வகித்துள்ளார்.
  • சிறைத்துறை தலைவராக இருந்தபோது கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தார்.
  • தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை டிஜிபியாக இருந்தவர். ரயில்வே காவல்துறை டிஜிபியாக தற்போது பதவி வகிக்கிறார்.
  • குடியரசுத்தலைவர் பதக்கம், உயிர்காப்பு நடவடிக்கைக்கான பிரதமரின் பதக்கம், வீரதீர செயல்களுக்கான முதல்வர் பதக்கம் உள்ளிட்டவற்றை பெற்றவர்.
  • சைலேந்திர பாபு குழித்துறையைச் சேர்ந்தவர். எம்.எஸ்.சி, எம்.பி.ஏ, பி.ஹெச்.டியையும், சைபர் கிரைம் ஆய்வுப் படிப்பையும் முடித்தவர்.