தமிழ்நாடு

பெண் காவலர் படுகொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் போராட்டம்

EllusamyKarthik

டெல்லி பெண் காவலர் ரஃபியா படுகொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண் சிந்தனையாளர்கள் மற்றும் பெண் விடுதலைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர். டெல்லியில் கடந்த 26 ஆம் தேதி 4 பேர் கொண்ட கும்பலால் 21 வயதே நிரம்பிய பெண் காவலர் ரஃபியா கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற கொடூர மரணம் அரங்கேறியிருக்காது என வேதனை தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நிர்பயா வழக்கில் கிடைத்த நீதி போல ரஃபியா வழக்கிலும் உரிய நீதி கிடைக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.