தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 21 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதன்படி தமிழகத்தில் இந்தாண்டு செப்டம்பரில் மட்டும் 10 ஆயிரத்து 481 கோடி ரூபாய் ஜிஎஸ்ட் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவே கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் 8 ஆயிரத்து 637 கோடி ரூபாயாக ஜிஎஸ்டி வசூல் இருந்தாகவும் நிதியமைச்சக புள்ளிவிவரம் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
இந்திய அளவில் ஜிஎஸ்டி வசூல் 10 ஆக சதவிகிதம் உயர்ந்துள்ள நிலையில், தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு 2 மடங்கு அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. தேசிய அளவில் செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல், கடந்த ஆண்டின் செப்டம்பருடன் ஒப்பிடுகையில் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது.