காஷ்மீர் கொடூர தாக்குதல்  pt
தமிழ்நாடு

காஷ்மீர் கொடூர தாக்குதல் |24 மணி நேரம் தமிழர்களுக்கு உதவ சிறப்பு மையம்!

இதுகுறித்த தகவலை தமிழக அரசு தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் அனந்த் நாக் மாவட்டத்தில் பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவுக்கு சென்றிருந்த பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், 26க்கும் மேற்பட்ட பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த சிலர் காயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு கொள்ள ஏதுவாக புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், 24 மணி நேரமும் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

011- 24193300 என்ற தொலைபேசி எண்ணுக்கும், 9289516712 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணிகளை ஒருங்கிணைக்க டெல்லிக்கு தமிழகத்திலிருந்து அப்தாப் ரசூல் என்ற ஐஏஎஸ் அதிகாரி அனுப்பப்பட உள்ளார். தமிழர்கள் சிலர் காயமடைந்ததாக வெளியான தகவலையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.