இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவரான சாரதா மேனனின் மறைவு, மருத்துவத் துறைக்கு பேரிழப்பு என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற சாரதா, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் முதல் பெண் கண்காணிப்பாளராக பணியாற்றிய பெருமைக்குரியவர் எனக் கூறியுள்ளார். சென்னையில் அவர் நிறுவிய மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம் அவரின் பங்களிப்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.