தமிழ்நாடு

அன்பு நண்பர் விஜயகாந்த் விரைவில் முழு உடல்நலன் பெறவேண்டும்: முதல்வர் மு.க ஸ்டாலின்

sharpana

மருத்துவ பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜய்காந்த் முழு உடல்நலத்துடன் திரும்பி பணிகளில் ஈடுபட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் திரும்பிவிடுவார் என்று அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் அன்பு நண்பர் <a href="https://twitter.com/iVijayakant?ref_src=twsrc%5Etfw">@iVijayakant</a> அவர்கள் விரைவில் முழு உடல்நலன் பெற்று தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள விழைகிறேன்.</p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://twitter.com/mkstalin/status/1394975384966471685?ref_src=twsrc%5Etfw">May 19, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ”மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் முழு உடல்நலன் பெற்று தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள விழைகிறேன்” என்று வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.