சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு  PT
தமிழ்நாடு

”பிப்.12ல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆரம்பம்; பிப்.19ல் தமிழக பட்ஜெட் தாக்கல்” - சபாநாயகர் அப்பாவு

PT

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் வரும் 12-ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, ”தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024 - 25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வருகின்ற 19ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இதைத்தொடர்ந்து, 20ஆம் தேதி முன்பணம் செலவு மானிய கோரிக்கையும், 21ம் தேதி முன்பண செலவு மானிய கோரிக்கைகளையும் தாக்கல் செய்ய உள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.