தமிழ்நாடு

தொடர் கனமழை எதிரொலி: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கெல்லாம் பள்ளி விடுமுறை?

நிவேதா ஜெகராஜா

கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, திருவாரூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், நாகை, தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறையில் மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

போலவே புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.