தமிழ்நாடு

தமிழ் – திராவிடம் கருத்துமோதல்: வைரமுத்து ட்வீட்

Veeramani

தமிழ் மற்றும் திராவிட சித்தாந்த கருத்து மோதல் குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்திருக்கிறார்.

இதுகுறித்து வைரமுத்து வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், “தமிழ் என்பது மொழி குறிக்கும் சொல்லென்றும், திராவிடம் என்பது இனக்குழு மற்றும் கலாசாரம் குறிக்கும் சொல்லென்றும் முன்னோர்கள் சொன்னார்கள். இரண்டு சொற்களுக்குமான கால இடைவெளியில் படையெடுப்பு வரலாறு படிந்துள்ளது என்று புரிந்து கொண்டால் இந்தக் கருத்துக் கலகம் முற்றுப்பெறும் என்று கருதலாம்” என தெரிவித்திருக்கிறார்.