தமிழ்நாடு

தாம்பரம்: ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த பெண்; காப்பாற்றிய போலீசாருக்கு குவியும் பாராட்டு

kaleelrahman

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்ற பெண்மணி தவறி விழுந்தார். அவரை ஓடிச்சென்று மீட்ட ரயில்வே போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள 8-வது நடைமேடையில் வயதான பெண்மணி ஒருவர் ரயிலில் ஏற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பெண்மணி தவறி விழுந்தார். உடனடியாக அங்கு பணியில் இருந்த ரயில்வே போலீஸ் ஜோஸ் என்பவர் ஓடிச்சென்று வயதான பெண்ணை மீட்டு ஆசுவாசபடுத்தி அமரச்செய்து பின்னர் அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அவர் பெயர் ஹமீதா பானு (50) என்பது தெரியவந்தது. அதேபோல் 90 வயது மூதாட்டி ஒருவர் ரயிலில் ஏற நடந்து செல்ல முடியாமல் அவதியுற்றார். அவரை ரயில்வே போலீசார் தூக்கிச் சென்று ரயிலில் ஏற்றிவிட்டனர். இதனை நேரில் பார்த்த பொதுமக்கள் ரயில்வே போலீசாரை வெகுவாக பாராட்டினர்.