தமிழ்நாடு

சம்பள பிரச்னை: போக்குவரத்து தொழிலாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை

webteam

போக்குவரத்து தொழிலாளர் ஊதிய உயர்வு குறித்த இறுதி கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் இன்று நடைபெறுகிறது.

குரோம்பேட்டை பணிமனை மையத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு உள்ளிட்ட 46 தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கின்றனர். 

ஏற்கனவே அமைச்சர் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அரசு ஊழியருக்கு இணையான ஊதியம், மூன்று ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெறுகிறது. முதல்வருடன் பேசி இன்று இறுதி செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்த வாக்குறுதிக்கு பின் பேச்சுவார்த்தை நடக்க இருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் இன்று முடிவு எட்டவில்லை என்றால் வேலை நிறுத்தம் செய்ய நேரிடும் என 10 தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்து வருகின்றனர்.