தமிழ்நாடு

கடை முன் இருந்த டேபிள், நாற்காலி திருட்டு - காட்டிக்கொடுத்த சிசிடிவி

கடை முன் இருந்த டேபிள், நாற்காலி திருட்டு - காட்டிக்கொடுத்த சிசிடிவி

webteam

காட்பாடியில் பூட்டிய கடையின் முன்பு இருந்த டேபிள் மற்றும் நாற்காலியை மர்ம நபர் திருடிச்சென்றார். 

வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் காட்பாடியில் இருந்து சித்தூர் செல்லும் சாலையில் எழுதுபொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில், கடையின் முன்பு வைத்திருந்த டேபிள் மற்றும் நாற்காலி திருடப்பட்டது. இதுதொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் திருநாவுக்கரசு புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கடையின் முன்பு இருந்த டேபிள் மற்றும் நாற்காலியை அடையாளம் தெரியாத நபர் எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இச்சம்பவம் குறித்து காட்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.