தமிழ்நாடு

”தடுப்பூசிக்காக மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசின் கதவை தட்ட வேண்டியுள்ளது” : டி.ஆர்.பாலு

webteam

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அதிக தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக திமுக எம்.பி பாலு குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக எம்பி டி.ஆர்.பாலு மத்திய அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்து பேசினார். பின்னர், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, “தமிழ்நாட்டுக்கு 12 கோடி டோஸ் தடுப்பூசி கேட்டுள்ளோம்.

ஜூலை மாதத்துக்கு 50 லட்சம் தடுப்பூசி தருவதாக கூறியுள்ளனர். எந்த தடுப்பூசி வேண்டும் என்று குறிப்பிட்டு கேட்கவில்லை. செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தொடங்க தயாராக உள்ளோம். மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசின் கதவை தட்ட வேண்டியுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அதிக தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.” என்றார்.