தமிழ்நாடு

'ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மருத்துவர்களை தேர்வு செய்க' - உச்சநீதிமன்றம்

JustinDurai
ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவுவதற்கான மருத்துவக் குழுவிற்கு மருத்துவர்களை தேர்வுசெய்ய எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவர்களை தேர்வுசெய்ய எய்ம்ஸ் இயக்குநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கக்கோரிய அப்போலோவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் குறித்து சாட்சியங்களிடம் விசாரிக்க விரும்பினால் விசாரிக்கலாம் எனவும் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 
ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பாக அப்போதைய நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டதோ, அந்தத் துறை சார்ந்த நிபுணர்களை பரிந்துரைக்க எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.