தமிழ்நாடு

சிக்கப்போவது யார்? சுப்ரமணி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

webteam

அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பர் நாமக்கல்லைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் சுப்ரமணி தற்கொலை செய்து கொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 7-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமானவரித்துறை சோதனையின் போது சுப்ரமணியின் வீடு மற்றும் அலுவலகத்திலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சோதனை நடந்த போது சுப்பிரமணி வெளிநாட்டில் இருந்தார்.

இந்தியா திரும்பிய பின்னர், இரு முறை சென்னை வருமானவரித்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வந்து சென்ற நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே சுப்பிரமணி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதி வைத்த தற்கொலைக் கடிதம் நேற்று வெளியானது. அதில் தனக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் தொடர்பில்லை என அவர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.