நாங்குநேரி சம்பவ விசாரணை
நாங்குநேரி சம்பவ விசாரணை புதிய தலைமுறை
தமிழ்நாடு

நாங்குநேரி சம்பவம்: துறைரீதியான விசாரணை குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் அறிக்கை சமர்பிப்பு!

PT WEB

நாங்குநேரியில் பள்ளி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் துறைரீதியான முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த பள்ளி மாணவன் மற்றும் அவரது சகோதரியை வீடு புகுந்து சக மாணவர்களே கொடூரமாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நாங்குநேரியில் பள்ளி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் துறைரீதியான முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை இயக்குநரிடம் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று அறிக்கையை தாக்கல் செய்தார்.