சைதாப்பேட்டை
சைதாப்பேட்டை புதிய தலைமுறை
தமிழ்நாடு

சைதாப்பேட்டை | மின்சாரம் இல்லாததால் அகல் விளக்கு ஒளியில் படித்த மாணவர்கள்!

PT WEB

மழை வெள்ளத்தால் 1500-க்கும் மேற்பட்ட வீடுகள் சென்னை சைதாப்பேட்டையில் பாதிக்கப்பட்டது. தண்ணீர் வடிய தொடங்கிய உடன் வீடுகளுக்கு திரும்பிய மக்கள், மின்சாரம் இல்லாததால் அவதியடைந்தனர். இதில் அங்கிருந்த மாணவர்கள்,
அகல் விளக்கு ஒளியில் படிக்கத் தொடங்கினர்.

அரையாண்டு தேர்வின் தேதியை மாற்றியமைத்தாலும், மாணவர்கள் கல்வியின் மேல் உள்ள ஆர்வத்தை குறைக்காமல் படித்து வருகின்றனர். 

மழை வெள்ளம் வந்ததால் நான்கு நாட்களாக படிக்கவில்லை என்றும், மின்சாரம் இல்லாததால் நண்பர்களுடன் சேர்ந்து விளக்கு வெளிச்சத்தில் படித்து வருவதாகவும் கூறுகின்றனர்.