நாகை மாவட்டம் நாகூரில் அரசு உதவிபெறும் தேசிய மேல்நிலைப் பள்ளியில் கட்டண உயர்வுக்கு அப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் முத்துகுமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆட்சி மன்றகுழு பொருளாளர் தங்கமணி ஆகியோர் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரக்குறைவாக பேசினர். இதனையறிந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆசிரயர் முத்துகுமாருக்கு ஆதரவாக நாகூரில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.