தமிழ்நாடு

மாணவ, மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரம்: ஆசிரியை மீது நடவடிக்கைக் கோரி மனு

kaleelrahman

பெருந்துறை அருகே பள்ளி கழிவறைகளை மாணவ மாணவிகளை கொண்டு சுத்தம் செய்ய வைத்த ஆசிரியை மீது எஸ்சிஃஎஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யவேண்டி பெற்றோர்கள் குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே முள்ளம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவ மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சுதா என்ற ஆசிரியை மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளி மாணவ மாணவிகளுடன் பெற்றோர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதில் சம்பவம் நடந்த அடுத்த நாள் ஆசிரியர் சுதா, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுடன் அமைச்சரை சந்திக்க அழைத்துச்சென்று 'தங்களை மிரட்டி அந்த வீடியோவை எடுத்ததாக' அமைச்சரிடம் கூற வற்புறுத்தியதாகவும் புகார் தெரிவித்தனர். மேலும் அப்பள்ளியில் அனைத்து வேலைகளையும் பள்ளி மாணவ மாணவிகள் தான் செய்ய வருவதாகவும் கூறி மாணவ மாணவிகள் வேதனை தெரிவித்தனர்.