தமிழ்நாடு

சிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்

webteam

சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தமிழக அரசிடம் ஒப்படைத்தார். 

தமிழ்நாட்டில் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் நிறைவடைந்துவிட்டதால், வழக்கு ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி அவர் ஆவணங்களை அளிக்காததால், தமிழ்நாடு அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இதையடுத்து, பொன் மாணிக்கவேல் ஒரு வாரத்திற்குள் அனைத்து ஆவணங்களையும் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு, அதுகுறித்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர். இந்நிலையில், சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.