தமிழ்நாடு

”மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும்”-சுயசரிதை நூல்வெளியீட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ஜா. ஜாக்சன் சிங்

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

மாநிலங்களின் உரிமைகள் பறிபோவதால், அம்மாநில மக்களின் அரசியல் உரிமைகளும் பறிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். உங்களின் ஒருவன் மு.க. ஸ்டாலின் என்ற சுயசரிதை நூல் வெளயீட்டு விழாவில் இந்தக் கருத்தை அவர் முன்வைத்தார். மு.க. ஸ்டாலினின் முழு பேச்சை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.