தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். 72 குண்டுகள் முழங்க அவருக்கு அரசு தரப்பில் இறுதி மரியாதை செய்யப்பட்டது.