தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு: பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்

Veeramani

(இடது: மறைந்த காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் | வலது: பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்)

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவிற்கு பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் ட்விட்டில் “ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்று காலை சிகிச்சைப் பலனின்றி மறைந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

அவரது இழப்பைத் தாங்கும் மனவலிமையை எல்லாம் வல்ல இறைவன் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியின் தொண்டர்களுக்கும் வழங்கிடவும், அவரது ஆன்மா நற்கதியடையவும் பிரார்த்திக்கின்றேன்” என தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட மாதவராவ் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.