தமிழ்நாடு

உடல் எடையை குறைக்க மருந்து சாப்பிட்ட இளைஞருக்கு, பத்தே நாட்களில் ஏற்பட்ட துயரம்!

webteam

ஸ்ரீபெரும்புதூர் அருகே உடல் எடையை குறைப்பதற்காக மருந்து வாங்கி சாப்பிட்ட இளைஞருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் கருணீகர் தெருவைச் சேர்ந்த பாளையம் என்பவரின் மகன் சூர்யா (20), தனியார் பால் பாக்கெட் விநியோகம் செய்யும் இவர், மிகவும் பருமனாக இருந்துள்ளார். இதனால் தனது உடல் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார்.

இந்நிலையில், தனியார் நிறுவனம் வழங்கிய மருந்துகளை வாங்கி 10 நாட்களாக சாப்பிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் சூர்யாவுக்கு மிக வேகமாக உடல் எடை குறைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 1 ஆம் தேதி இரவு சூர்யாவுக்கு உடல் நிலை மோசமானதை அடுத்து உறுவினர்கள் அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த சூர்யா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சோமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்