தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதூர்: ஃபாக்ஸ்கான் ஆலையில் நாளை முதல் உற்பத்தி தொடங்கும் என அறிவிப்பு

kaleelrahman

ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் ஆலையில் நாளை முதல் உற்பத்தி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்துவரும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி கடந்த மாதம் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். பெண் தொழிலாளர்களும் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதற்கட்டமாக நாளை முதல் உற்பத்தியை தொடங்க உள்ளது. இதற்காக ஆலை இன்று திறக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வைரஸ் தொற்று இல்லாதவர்கள் மீண்டும் நாளை முதல் பணிக்குச் செல்வர்.

அதே போல நாளை 200 பேருக்கு தொற்று பரிசோதனை நடைபெற உள்ளது. இதனிடையே வருவாய்த் துறை சார்பாக விடுதிகளை கண்காணிப்பதற்கும் சுகாதார சீர்கேடுகள் மற்றும் சுத்தமான உணவு, ஊழியர்களுக்கு கொடுக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்கும் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.