தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் எனப் புகார்

Veeramani

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதால் அச்சத்துடன் அவசர அவசரமாக கரை திரும்பினர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்குவந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

கற்கள், பாட்டில்களை வீசியெறிந்ததுடன் வலைகளையும் அறுத்து சேதப்படுத்தியதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு படகிலும் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரகள் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.