தமிழ்நாடு

இலங்கை கடற்படை தாக்கியதாக புகார்.. தமிழக மீனவர்கள் காயம்..!

இலங்கை கடற்படை தாக்கியதாக புகார்.. தமிழக மீனவர்கள் காயம்..!

Rasus

நடுக்கடலில் இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாக தமிழக மீனவர்கள் புகார் கூறியுள்ளனர். அத்துடன் விசைப்படகுகளையும் சேதப்படுத்தியதாக கரை திரும்பிய மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இலங்கை கடற்படை தாக்குதலில் காயமடைந்த 4 மீனவர்கள் மணமேல்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.