தமிழ்நாடு

தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

Veeramani

நாகை மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

நாகை மாவட்டத்திலிருந்து மீன் பிடிக்க நேற்று புறப்பட்டுச் சென்ற மீனவர்கள் பருத்தித்துறை கடற்பரப்பிற்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 9 படகுகளில் வந்த இலங்கையை சேர்ந்த மீனவர்கள் நாகை மீனவர்களினி இரண்டு படகுகளை சுற்றிவளைத்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 21 மீனவர்களை கைது செய்ததுடன் அவர்களது இரண்டு படகுகளையும் கைப்பற்றி காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்துவதும், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.