மரப்பாலம் முகநூல்
தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்காக... பெசன்ட் நகரில் அமைக்கப்பட்ட மரப்பாலம்!

மரப்பாலத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

PT WEB

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடலினை அருகில் கண்டு மகிழ்ந்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மரப்பாலத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

1 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 190 மீட்டர் நீளம், 2.80 மீட்டர் அகலத்தில் இந்த மரப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, திருவான்மியூரில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மரப்பாலம் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.