திருப்பதி பிரம்மோற்சவத்தையொட்டி, தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பிரம்மோற்சவத்தில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு பயணித்து வருகின்றனர். இதனால், பயணியர் வசதிக்காக தமிழகத்தில் இருந்து அக்டோபர் 6ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருப்பதிக்கு வழக்கமாக செல்லும், 60 விரைவு பேருந்துகளோடு, கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.