சிறப்பு ஏற்பாடு
சிறப்பு ஏற்பாடு pt desk
தமிழ்நாடு

வாணியம்பாடி: “வாக்காள பெருமக்களே வருக! வருக!” – வாக்காளர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடு!

webteam

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நாளை (19.04.2024) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

சிறப்பு ஏற்பாடு

இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 121, 122 ஆகிய வாக்குச் சாவடி மையங்கள் வாணியம்பாடி காந்தி நகர் அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களை வரவேற்று வாணியம்பாடி நகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோடை வெயிலில் வாக்களிக்க காத்திருக்கும் வாக்காளர்களுக்கு பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் வாக்காளர்கள் அமர்வதற்கான சிறப்பு நாற்காலிகளும் அலங்கார தோரணங்களும் நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு ஏற்பாடு

மேலும் அதிகாரிகள் மற்றும் வாக்காளர்களை வரவேற்று சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.