தமிழ்நாடு

சபாநாயகரின் கையைப்பிடித்து இழுத்த திமுகவினர்

webteam

சட்டமன்றத்தில் ஏற்பட்ட தொடர் அமளி காரணமாக சபாநாயகர் தனபாலை, அவையை விட்டு வெளியேற முயற்சித்தார்.

அப்போது, திமுக எம்எல்ஏக்கள் சிலர் அவரை கையைப் பிடித்து இழுத்து இருக்கையில் அமரச் சொல்லி வற்புறுத்தினர். பின்னர், அவைக் காவலர்கள் சபாநாயகரை பாதுகாப்பாக அவையை விட்டு அழைத்து சென்றனர். இதனைத் தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள் ரங்கநாதன் மற்றும் கு.க.செல்வம் ஆகியோர் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தனர்.